Published : 02 May 2020 08:31 AM
Last Updated : 02 May 2020 08:31 AM

மகாராஷ்டிராவில் இருந்து பஞ்சாப் திரும்பிய 173 சீக்கியர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று

மகாராஷ்டிராவில் இருந்து பஞ்சாப் திரும்பிய சீக்கிய பக்தர்களில் இதுவரை 173 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களால் பஞ்சாபுக்கு புதிய கரோனா தொற்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவின் நான்டெட் நகரில் புகழ்பெற்ற ஹசூர் சாகிப் குருத்வாரா உள்ளது. கரோனா வைரஸ் தொடர்பான ஊரடங்கு உத்தரவால் அங்கு யாத்திரை சென்ற சுமார் 3,700 சீக்கிய பக்தர்கள் சிக்கிக் கொண்டனர். இவர்கள் சொந்த ஊர் திரும்ப மத்திய அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, பஞ்சாப் அரசு 80 பேருந்துகளை நான்டெட் நகருக்கு அனுப்பியது. கடந்த சில தினங்களில் 3,500 பேர் பஞ்சாப் திரும்பியதாகவும் இவர்கள் பல்வேறு இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்தது. இந்நிலையில் இவர்களில் இதுவரை 173 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, ஏப்ரல் 26-க்கு முன்பாகவே, 200-க்கும் மேற்பட்ட சீக்கிய பக்தர்கள் தனியார் வாகனங்கள் மூலம் பஞ்சாப் திரும்பினர். இவர்கள் சோதனைச் சாவடிகளில் தடுத்து நிறுத்தப்படவோ அல்லது பரிசோதிக்கப்படவோ இல்லை என கூறப்படுகிறது. அவர்களை தேடிக் கண்டுபிடித்து தனிமைப்படுத்தும் பணியில் மாநில சுகாதாரத் துறை ஈடுபட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து திரும்பிய சீக்கியர்களால் பஞ்சாபுக்கு புதிய கரோனா தொற்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மேலும் இது அம்மாநிலத்துக்கு மிகப்பெரிய சவாலாகவும் உருவெடுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x