Published : 02 May 2020 08:27 AM
Last Updated : 02 May 2020 08:27 AM

கோவாவில் முகக்கவசம் அணியாதோருக்கு பெட்ரோல், ரேஷன் பொருட்கள் கிடையாது

பனாஜி:

கோவாவில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல், ரேஷன் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால் கோவாவை பொறுத்தவரை, வைரஸ் பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை அங்கு வெறும் 7 பேர் மட்டுமே இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், கரோனா வைரஸை முற்றிலுமாக அழிக்கும் நோக்கில் கோவா அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவா தலைமைச் செயலாளர் பரிமள் ராய் தலைமையில் மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில், "வீட்டை விட்டு வெளியில் வருபவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல், ரேஷன் பொருட்களை வழங்கக் கூடாது. பொது விநியோகத் துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் இதுகுறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x