Published : 30 Apr 2020 10:35 PM
Last Updated : 30 Apr 2020 10:35 PM

மோடியுடன் பேசியதால் பிரச்சினை தீர்ந்தது: உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியில் தொடர வாய்ப்பு: தேர்தல் ஆணையத்திற்கு ஆளுநர் வேண்டுகோள்

கோப்புப் படம்

மும்பை

உத்தவ் தாக்கரே எம்எல்சியாக தேர்வாக வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில் மாநில அரசின் வேண்டுகோளை ஏற்று காலியாகவுள்ள எம்எல்சி பதவிக்கான தேர்தலை அறிவிக்கக் கோரி ஆளுநர் கோஷியாரி தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மகாராஷ்ட்ராவில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் கடந்த ஆண்டு நவம்பரி முடிவுக்கு வந்த போது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது.

சிவசேனாத் தலைவர் உத்தவ் தாக்கரே கடும் சர்ச்சைகளுக்கு இடையே முதல்வர் பொறுப்பை ஏற்றார். அவர் எம்எல்ஏ.ஆகவோ, எம்எல்சி ஆகவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் சட்டப்படி முதல்வராக நீடிக்க வேண்டுமெனில் அவர் 6 மாதங்களுக்குள் எம்எல்ஏ.ஆகவோ எம்எல்சி ஆகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

வரும் மே மாதம் 27ம் தேதியுடன் உத்தவ் தாக்கரே பதவியேற்று 6 மாதங்கள் நிறைவடைகிறது. இந்நிலையில் எம்எல்ஏ ஆகவோ, எம்எல்சியாகவே இல்லாத உத்தவ் தாக்கரே பதவி நீடிப்பது குறித்து கேள்வி எழுந்தது.

மகாராஷ்ட்ராவில் காலியாக உள்ள 9 எம்.எல்.சி. இடங்களுக்கு கடந்த 24ம் தேதி தேர்தல் நடப்பதாக இருந்தது. இதில் போட்டியிட்டு எம்எல்சியாக உத்தவ் திட்டமிட்டிருந்தார் ஆனால் கரோனாவினால் தேர்தல் நடைபெறவில்லை. தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த 9ம் தேதி மும்பையில் நடந்த மகாராஷ்ட்ரா அமைச்சரவைக் கூட்டத்தில் மாநில ஆளுநருக்கான 2 எம்எல்சி இடங்கள் ஒதுக்கீட்டில் ஒரு இடத்தில் உத்தவ் தாக்கரேயை நியமிக்க வேண்டும் என ஆளுநர் கோஷ்யாரிக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இது தொடர்பாக ஆளுநர் இன்னும் எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. இதனையடுத்து கோஷ்யாரியை துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் சில அமைச்சர்கள் சந்தித்து உத்தவ் தாக்கரேயை எம்எல்சியாக நியமிக்க கோரிக்கை விடுத்தனர், ஆனால் ஆளுநர் எந்த உறுதியையும் அளித்ததாகத் தெரியவில்லை.
இதனையடுத்து உத்தவ்வை எம்எல்சி ஆக தேர்வு செய்ய கவர்னருக்கு இரண்டாவது முறையாகப் பரிந்துரைத்துள்ளது.
ஆளுநர் இது தொடர்பாக முடிவெடுத்து தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைக்க வேண்டும்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியுடன் உத்தவ் தாக்கரே பேசியதாக தகவல் வெளியானது. ஆளுநர் பரிந்துரை செய்யவில்லை எனில் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியிலிருந்து விலக நேரிடும்.

உத்தவ் தாக்கரே எம்எல்சியாக தேர்வாக வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில் மாநில அரசின் வேண்டுகோளை ஏற்று காலியாகவுள்ள எம்எல்சி பதவிக்கான தேர்தலை அறிவிக்கக் கோரி ஆளுநர் கோஷியாரி தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x