Last Updated : 30 Apr, 2020 10:34 AM

 

Published : 30 Apr 2020 10:34 AM
Last Updated : 30 Apr 2020 10:34 AM

கரோனா பாதிப்பு இந்தியாவில் 33 ஆயிரத்தைக் கடந்தது;உயிரிழப்பு 1,074 ஆக அதிகரிப்பு: மகாராஷ்டிராவி்ல் ஒரேநாளில் 32 பேர், குஜராத்தில் 16 பேர் பலி 

கோப்புப்படம்

புதுடெல்லி

கரோனாவால் இந்தியாவில் பாதிப்பு நாளுக்குள் நாள் அதிகரி்த்து வருகிறது. கடந்த 24மணிநேரத்தில் 1,718 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 67 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது

இதன் மூலம் கரோனாவில் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 50 ஆக அதிகரித்துள்ளது,உயிரிழந்தோர் எண்ணிக்கையும் ஆயிரத்தைக்கடந்து 1,074 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்து 325 ஆக அதிகரித்துள்ளது.

புதன்கிழமை மாலை வரை 66 பேர் உயிரிழந்துள்ளனர்,இதில் மகாராஷ்டிராவில் 32 பேர், குஜராத்தில் 16 ேபர், மத்தியப்பிரதேசத்தில் 10 பேர், உத்தரப்பிரதேசத்தில் 3 பேர், தமிழகம், டெல்லியில் தலா இருவர், கர்நாடகாவில் ஒருவர் உயிரிழந்தனர்

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 432 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் நேற்று பலி எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் நேற்று 10 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 129 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் பலியானோர் எண்ணிக்கை 56 ேபரும், ராஜஸ்தானில் 51 பேர் உயிரிழந்துள்ளனர். தெலங்கானாவில் நேற்று உயிரிழப்பு இல்லாததால் 26 பேர் என்ற எண்ணிக்கை தொடர்கிறது. உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது, தமிழகத்தில் 27 பேர், கர்நாடகாவில் 21 பேர், மேற்கு வங்கத்தில் தலா 22 பேர், பஞ்சாப்பில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 8 பேரும், கேரளாவில் 4 பேரும், ஹரியாணா, ஜார்க்கண்ட், தலா 3 பேரும் கரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். பிஹாரில் 2 பேரும், ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 9,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 1,593 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து டெல்லியில் 3,439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1092 பேர் குணமடைந்துள்ளனர். குஜராத்தில் 4,082 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் 2,438 பேரும், தமிழகத்தில் 2,162 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் 1,210 பேர் குணமடைந்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 2,561 பேரும், தெலங்கானாவில் 1,012 பேரும், கேரளாவில் 495 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர், 369 ேபர் குணமடைந்தனர்.

உத்தரப் பிரதேசத்தில் 2,134 பேர், ஆந்திரவில் 1,332 பேர், கர்நாடகாவில் 535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 581 பேர், மேற்கு வங்கத்தில் 758 பேர், பஞ்சாப்பில் 357 பேர், ஹரியாணாவில் 310 பேர், பிஹாரில் 392 பேர், அசாமில் 38 பேர், உத்தரகாண்ட்டில் 55 பேர், ஒடிசாவில் 125 பேர், சண்டிகரில் 56 பேர், சத்தீஸ்கரில் 38 பேர், லடாக்கில் 22 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜார்க்கண்டில் 107 பேர் , அந்தமான் நிகோபர் தீவில் 33 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 40 பேர், புதுச்சேரியில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 3 பேர் குணமடைந்தனர். கோவாவில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை. மோகாலயாவில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூர், அருணாச்சலப்பிரதேசத்தில் யாரும் பாதி்க்கப்படவில்லை, மிசோரத்தில், ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்''.

இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x