Published : 29 Apr 2020 09:49 PM
Last Updated : 29 Apr 2020 09:49 PM

இந்தியாவில் கரோனா பாதிப்பு; 31787 ஆக அதிகரிப்பு; உயிரிழப்பு 1,008 ஆக உயர்வு

புதுடெல்லி

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 31787 ஆக அதிகரித்துள்ள நிலையில் கரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்க1,008 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதி வரை ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இன்று மாலை நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கரோனா பாதிப்பு குறித்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது, கடந்த 24 மணிநேரத்தில் 1,813 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.உயிரிழப்பு 71 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 31787 ஆக அதிகரித்துள்ள நிலையில் 22,982 கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். கரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்க 1,008 ஆக உயர்ந்துள்ளது. 7,797 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x