Published : 28 Apr 2020 03:36 PM
Last Updated : 28 Apr 2020 03:36 PM

கோட்டாவில் இருந்து பேருந்தில் அழைத்து வரப்பட்ட 2 ஆயிரம் மாணவர்கள்: கரோனா பரிசோதனை நடத்தும் சத்தீீஸ்கர் அரசு

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் இருந்து பேருந்து மூலம் அழைத்து வரப்பட்ட 2 ஆயிரம் மாணவர்களுக்கு கரோனா பரிசோதனையை சத்தீீஸ்கர் அரசு நடத்தி வருகிறது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா நகரத்தில் தங்கி பயிற்சி மையங்களில் படித்துவரும் சுமார் 7000 மாணவர்கள் சிக்கிக் கொண்டனர். இவர்கள் அனைவரும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் பேருந்துகளை அனுப்பி பத்திரமாக மீட்டு வந்தது.

கோட்டாவில் சிக்கிய மாணவர்களில் மகராஷ்டிரா உட்பட பல்வேறு மாநில மாணவர்களும் உள்ளனர். அவர்கள் அனைவரும் பயிற்சி மையங்கள் உள்ள பகுதியில் தங்கியுள்ளனர். அவர்கள் போதிய உணவு உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் தவிப்பதாக தகவல் வந்துள்ளது.

​இதையடுத்து மகாராஷ்டிரா, பிஹார் என பல மாநில அரசுகளும் கோட்டாவில் தங்கியுள்ள மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் இருந்து பேருந்து மூலம் 2 ஆயிரம் மாணவர்களை சத்தீஸ்கர் அரசு அழைத்து வந்துள்ளது. ராய்ப்பூர் வந்து சேர்ந்துள்ள அவர்களுக்கு கரோனா பரிசோதனையை சத்தீீஸ்கர் அரசு நடத்தி வருகிறது.

தனிமைப்படுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் முடிந்து அவர்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x