

கரோனா வைரஸ் அறிகுறிகள் மிகவும் லேசானதாக இருந்தால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும் வசதி இருந்தால் வீட்டிலேயே தனிமையில் இருந்து மற்றவர்களுடன் தொடர்பைத் துண்டித்துக் கொள்ளுங்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இதற்கு முன், வெளியிட்ட வழிகாட்டி நெறிமுறைகளில், “தனிமைப்படுத்தும் பகுதியில் வசிப்போருக்கு லேசாகவோ அல்லது மிதமாகவோ அல்லது தீவிரமாகவோ கரோனா அறிகுறிகள் இருந்தால், உடனடியாக கோவிட்-19 சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்திருந்த நிலையில், இப்போது சுகாதாரத்துறை அமைச்சகம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று இரவு வெளியிட்ட புதிய வழிகாட்டி நெறிமுறைகள் பின்வருமாறு:
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் கணிப்பின்படி கரோனா வைரஸால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 80 சதவீதம் பேருக்கு பெரிதாக பாதிப்புஏற்படுவதில்லை. 20 சதவீதம் பேருக்கு மட்டுமே மூச்சுவிடுதலில் சிரமம், மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலை, ஐசியூவில் இருக்க வேண்டிய நிலை தேவைப்படுகிறது. 80 சதவீத நோயாளிகளுக்கு கரோனா அறிகுறிகளைக் குணப்படுத்தும் சிகிச்சையளித்தாலே போதுமானது. 15 சதவீதம் பேருக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.