Published : 28 Apr 2020 02:33 PM
Last Updated : 28 Apr 2020 02:33 PM

நிதி ஆயோக் ஊழியருக்கு கரோனா தொற்று: டெல்லி அலுவலகத்துக்கு சீல்

டெல்லி நிதி ஆயோக் ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அந்த அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதி வரை ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் டெல்லி உள்ள நிதி ஆயோக் ஊழியர் ஒருவருக்கு இன்று காலை கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இயக்குநர் மட்டத்திலான பதவியில் இருக்கும் அவர் தொடர்ந்து பணிக்கு வந்துள்ளதால் உடனடியக அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. அலுவலத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த ஊழியருடன் தொடர்பில் இருந்துவர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x