Last Updated : 28 Apr, 2020 10:15 AM

 

Published : 28 Apr 2020 10:15 AM
Last Updated : 28 Apr 2020 10:15 AM

30 ஆயிரத்தை நெருங்குகிறது: கரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 1,543 பேர் பாதிப்பு: முதல் முறையாக அதிகரித்த உயிரிழப்பு: மகாராஷ்டிரா, குஜராத் கவலை

கோப்புப்படம்

புதுடெல்லி

இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது, கடந்த 24 மணிநேரத்தில் 1,543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னெப்போதும் இல்லாத வகையில் முதல்முறையாக உயிரிழப்பு 62ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 29 ஆயிரத்து 435 ஆக அதிகரித்துள்ளது. இதில் 6,868 பேர் குணமடைந்துள்ளனர். 934 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 21 ஆயிரத்து 632 ஆக இருக்கிறது. இதில் 111 பேர் வெளிநாட்டினர். தி்ங்கள்கிழமை மாலை வரை 48 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 27 பேர் மகாராஷ்டிராவிலும், குஜராத்தில் 11 பேரும், ராஜஸ்தானில் 5 பேரும், மத்தியப்பிரதேசத்தில் 4 பேரும், ஜம்மு காஷ்மீரில் ஒருவரும் இறந்துள்ளனர்

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 369 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் நேற்று பலி எண்ணிக்கை 162ஆக அதிகரித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் நேற்று 4 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் பலியானோர் எண்ணிக்கை 54 ஆக தொடர்ந்து இருந்து வருகிறது. ராஜஸ்தானில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். தெலங்கானாவில் நேற்று உயிரிழப்பு இல்லாததால் 26 பேர் என்ற எண்ணிக்கை தொடர்கிறது. உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 31 ஆகவும் தமிழகத்தில் 24 பேர், கர்நாடகா, மேற்கு வங்கத்தில் தலா 20 பேர், பஞ்சாப்பில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 7 பேரும், கேரளாவில் 4 பேரும், ஹரியாணா, ஜார்க்கண்ட், தலா 3 பேரும் கரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். பிஹாரில் 2 பேரும், ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 8,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 1,252 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து டெல்லியில் 3,108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 877 பேர் குணமடைந்துள்ளனர். குஜராத்தில் 3,548 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் 2,662 பேரும், தமிழகத்தில் 1,937 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் 1,101 பேர் குணமடைந்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 2,168 பேரும், தெலங்கானாவில் 1,004 பேரும், கேரளாவில் 481 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் 1,955 பேர், ஆந்திரவில் 1,183 பேர், கர்நாடகாவில் 512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 546 பேர், மேற்கு வங்கத்தில் 697 பேர், பஞ்சாப்பில் 313 பேர், ஹரியாணாவில் 296 பேர், பிஹாரில் 345 பேர், அசாமில் 36 பேர், உத்தரகாண்ட்டில் 51 பேர், ஒடிசாவில் 118 பேர், சண்டிகரில் 40 பேர், சத்தீஸ்கரில் 37 பேர், லடாக்கில் 20 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜார்க்கண்டில் 82 பேர் , அந்தமான் நிகோபர் தீவில் 33 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 40 பேர், புதுச்சேரியில் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 3 பேர் குணமடைந்தனர். கோவாவில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை. மோகாலயாவில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூரில் 2 பேர், மிசோரம், அருணாச்சலப் பிரதேசத்தில் தலா ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்''.

இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x