Published : 26 Apr 2020 06:36 PM
Last Updated : 26 Apr 2020 06:36 PM

தப்லீகி ஜமாத் தலைவர் மவுலானா சாத் காந்தவ்லிக்கு கரோனா தொற்று இல்லை

தப்லீகி ஜமாத் தலைவர் மவுலானா சாத் காந்தவ்லிக்கு கரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது. இதனை அவர் வழக்கறிஞர் ஞாயிறன்று தெரிவித்தார்.

டெல்லி போலீஸ் குற்றப்பிரிவு தப்லீகி ஜமாத் தலவிஅர் மவுலானா சாத் காந்தவ்லிக்கு கரோனா டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டதையடுத்து டெஸ்ட் எடுக்கப்பட்டது.

இப்போது சோதனையில் கரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டதால் அவர் திங்களன்று டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் முன் ஆஜராகலாம் என்று கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமையன்று இந்தியா டுடே டிவியில் ஒரு பேட்டியில் தப்லீகி ஜமாத் தலைவர் மவுலானா சாத் தனக்கு கோவிட்19 பரிசோதனை செய்யப்பட்டதாகவும் முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ஏப்ரல் 16ம் தேதியன்று மவுலானா சாத் மீதும் அவர் தொடர்புடைய அறக்கட்டளைகள் மீதும் அமலாக்கப்பிரிவு நிதி முறைகேடு வழக்குத் தொடர்ந்தது.

கடந்த மாதம் மவுலானா சாத் டெல்லி நிஜமுதீன் மர்காஸில் வழிபாட்டுக் கூட்டத்தை நடத்தியதிலிருந்து சர்ச்சைகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x