Published : 25 Apr 2020 07:27 PM
Last Updated : 25 Apr 2020 07:27 PM

அசாமில் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து: தவிக்கும் மக்களுக்காக 3 நாட்களுக்கு இயக்க முடிவு

புதுடெல்லி

சொந்த ஊர்களை விட்டு வெளியூரில் சிக்கியுள்ள மக்களின் நலனுக்காக 3 நாட்கள் மாவட்டங்களுக்கு இடையிலான அரசு பேருந்து போக்குவரத்தை அசாம் மாநில அரசு இன்று தொடங்கியுள்ளது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதி வரை ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் ஆங்காங்கே சிக்கியுள்ளனர். அவர்களை மீட்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். அசாம் மாநிலத்தில் நகரங்களில் ஏராளமானோர் சிக்கியுள்ளனர்.

அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க சொந்த ஊர்களை விட்டு வெளியூரில் சிக்கியுள்ள மக்களின் நலனுக்காக 3 நாட்கள் மாவட்டங்களுக்கு இடையிலான அரசு பேருந்து போக்குவரத்தை அசாம் மாநில அரசு இன்று தொடங்கியுள்ளது. மூன்று நாட்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அசாம் அரசு அறிவித்துள்ளது.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x