Published : 25 Apr 2020 07:58 AM
Last Updated : 25 Apr 2020 07:58 AM

பிரசாந்த் கிஷோர் சரக்கு விமானத்தில் பயணம் செய்தாரா?

கரோனா வைரஸ் பரவலைத்தடுப்பதற்காக நாடு முழுவதும்ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்சில தினங்களுக்கு முன்பு டெல்லியிலிருந்து கொல்கத்தாவுக்கு சரக்கு விமானத்தில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

கரோனா வைரஸை எதிர்கொள்ளும் விவகாரத்தில் மேற்குவங்க அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்குநிலவுகிறது. அதனை சமாளிக்கவியூகம் வகுத்துக் கொடுக்குமாறு பிரசாந்த் கிஷோரிடம் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டதாகவும், அதற்காகவே அவர் கொல்கத்தா சென்றதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

எனினும், இதனை பிரசாந்த் கிஷோர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து விரிவானவிசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x