Published : 24 Apr 2020 04:25 PM
Last Updated : 24 Apr 2020 04:25 PM

மசூதிக்கு செல்ல வேண்டாம்; வீட்டிலேயே தொழுகை நடத்துங்கள்: ஒவைசி வேண்டுகோள்

ஹைதராபாத்

ஊரடங்கு அமலில் உள்ள இந்த சமயத்தில் யாரும் மசூதிக்கு சென்று தொழுகை நடத்த வேண்டாம் என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி வலியுறுத்தியுள்ளார்.

இஸ்லாமியர்களின் ரமலான் மாதம் ஏப்ரல் 24-ம் தேதி தொடங்குகிறது. இதில் 30 நாட்கள் நோன்பு இருக்கும் முஸ்லிம்கள் அதன் இறுதியில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

இம்மாதத்தில் தினமும் மாலையில் நோன்பு முடிக்க அனைவரும் ஒன்றாகக் கூடுவதுடன், இப்தார் நிகழ்ச்சிகளும் நடைபெறுவது உண்டு. இதுமட்டுமின்றி மசூதிகளில் ஒன்று கூடி சிறப்பு தொழுகையும் நடத்துவார்கள். தற்போது கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் ரமலான் மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் இதுபோன்ற வழக்கங்களுக்கு பதிலாக வீடுகளிலேயே தொழுகை நடத்த வேண்டும் என பல்வேறு இஸ்லாமிய தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் சமூக விலகலை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

ஊரடங்கு அமலில் உள்ள இந்த சமயத்தில் யாரும் மசூதிக்கு சென்று தொழுகை நடத்த வேண்டாம் என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசியும் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘ஊரடங்கு அமலில் உள்ள இந்த சமயத்தில் யாரும் மசூதிக்கு சென்று தொழுகை நடத்த வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். வீட்டை விட்டு வெளியே வர யாருக்கும் அனுமதியில்லை. சமூக விலகலை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ரம்ஜான் மாதமாக இருந்தாலும் அனைவரின் நலனை கருத்தில் கொண்டு இதனை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x