Last Updated : 24 Apr, 2020 10:35 AM

 

Published : 24 Apr 2020 10:35 AM
Last Updated : 24 Apr 2020 10:35 AM

இந்தியாவில் கரோனா பாதிப்பு 23 ஆயிரத்தைக் கடந்தது: 24 மணிநேரத்தில் 37 பேர் உயிரிழப்பு


இந்தியாவில் கரோனா வைரஸின் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 37 ேபர் உயிரிழந்துள்ளனர், 1,684 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால் கரோனா வைரஸால் ஒட்டுமொத்தமாக பாதி்க்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23 ஆயிரத்தைக் கடந்து 23 ஆயிரத்து 77 ஆகவும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 718 ஆகவும் அதிகரித்துள்ளது. 4,749 பேர் கரோனா வைரஸால் குணமடைந்துள்ளனர்.

ஆனால், இந்திய மருத்து ஆராய்ச்சிக் கவுன்சில்(ஐசிஎம்ஆர்)அறிக்கையில் இதுவரை 23 ஆயிரத்து 502 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 77 பேர் வெளிநாட்டினர். வியாழக்கிழமை மாலைவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மகராஷ்டிராவில் 14 ேபர், குஜராத்தில் 9 பேர், உத்தரப்பிரதேசத்தில் 3 பேர், டெல்லி, மத்திய பிரதேசம், தமிழகத்தில் தலா 2 பேர் உயிரிழந்துள்ளனர்

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 283 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் நேற்று 14 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த இடத்தில் குஜராத்தில் நேற்று 9 பேர் உயிரிழந்ததையடுத்து அங்கு பலி 112 ஆக அதிகரித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை83 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் நேற்று ஒருவர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. ராஜஸ்தானில் 27 பேரும், தெலங்கானா, உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தலா 24 ஆகவும் உள்ளது. தமிழகத்தில்20 பேர், கர்நாடகாவில் 17 பேர், பஞ்சாப்பில் 16 பேர், மேற்கு வங்கத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 5 பேரும், ஹரியாணா, ஜார்கண்ட், கேரளாவில் தலா 3 பேரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். பிஹாரில் 2 பேரும், ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 6,430 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் மகாராஷ்டிர மாநிலத்தில் 700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 840 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து டெல்லியில் 2,376 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 808 பேர் குணமடைந்துள்ளனர். குஜராத்தில் 2,624 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.ராஜஸ்தானில் 1,964 பேரும், தமிழகத்தில் 1,683 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர், 752 பேர் குணமடைந்துள்ளனர். மத்தியப்பிரதேசத்தில் 1,699 பேரும், தெலங்கானாவில் 960 பேரும், கேரளாவில் 447 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் 1,510 பேர், ஆந்திரவில் 895 பேரும், கர்நாடகாவில் 445 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 427 பேர், மேற்கு வங்கத்தில் 514 பேர், பஞ்சாப்பில் 277 பேர், ஹரியாணாவில் 272 பேர், பிஹாரில் 153 பேர், அசாமில் 36 பேர், உத்தரகாண்ட்டில் 47 பேர், ஒடிசாவில் 90 பேர், சண்டிகரில் 27 பேர், சத்தீஸ்கரில் 36 பேர், லடாக்கில் 18 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தமான் நிகோபர் தீவில் 22 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 40 பேர், புதுச்சேரியில் 7 பேர் பாதிக்கப்பட்டு 3 பேர் குணமடைந்தனர். கோவாவில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை. மோகாலயாவில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜார்க்கண்டில் 53 பேர், மணிப்பூரில் 2 பேர், மிசோரம், அருணாச்சலப் பிரதேசத்தில் தலா ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்''.

இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x