Last Updated : 01 Aug, 2015 10:47 AM

 

Published : 01 Aug 2015 10:47 AM
Last Updated : 01 Aug 2015 10:47 AM

மது குடிப்போர், விற்போருக்கு துடைப்பத்தால் அடி: பிஹாரில் மகளிர் பஞ்சாயத்து முடிவு

மது குடிப்போர், விற்போரை துடைப்பத்தால் விளாச வேண்டும், என்று பிஹாரில் உள்ள மகளிர் பஞ்சாயத்து ஒன்று முடிவு செய்துள்ளது.

பிஹாரில் ஷேக்புரா மாவட்டத் தில் உள்ளது ரம்சான்பூர் எனும் கிராமம். இங்கு மகளிர் பஞ்சாயத்து உள்ளது. கிராமப்புறங்களில் மது பயன்பாடு அதிகமாக இருப்பதால், இங்கு மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று மக்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று ஆலோ சனைக் கூட்டம் நடத்திய ரம்சான்பூர் மகளிர் பஞ்சாயத்து, இனி அப்பகுதியில் மது குடிப்பவர் களையும் மது விற்பனை செய்பவர்களையும் கண்டால், துடைப்பத்தால் அடிப்பது என முடிவு செய்துள்ளது.

திருமண நிகழ்ச்சிகளின் போது குடித்துவிட்டுவருபவர்களால் ஏற்படும் இன்னல்களை அடுத்து அதற்கு முடிவு காண ஊர் முதியோர்கள் ஆலோசனை நடத்தினர். அதையேற்று மகளிர் பஞ்சாயத்து இந்த முடிவை எடுத்தது.

இதுகுறித்து மகளிர் பஞ்சாயத் தின் தலைவர்களில் ஒருவரான ஷாமா தேவி கூறும்போது, "துடைப் பத்தால் அடிப்பது மட்டுமல்ல அபராதமும் விதிக்கவுள்ளோம். இந்த முடிவை மக்களுக்குத் தெரிவிக்க கிராமம் முழுவதிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

மது பயன்பாட்டால் பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மது ஒரு சாபக்கேடு போல இருக்கிறது. எனவே அதனை எதிர்த்துப் போராட முடிவு செய்துள்ளோம்" என்றார்.

மது குடிப்பவர்களுக்கு ரூ.2,500 மற்றும் விற்பனை செய்பவர் களுக்கு ரூ.19 ஆயிரமும் அபராத மாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மது விற்பனைக்கு எதிரான பெண்களின் ஆவேசத்தை உணர்ந்த பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கைக் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x