Published : 23 Apr 2020 04:59 PM
Last Updated : 23 Apr 2020 04:59 PM

உலக சுகாதார அமைப்புக்கு சிவப்புக்கம்பள வரவேற்பா?- மம்தா பான்ஜியை சாடிய மேற்குவங்க ஆளுநர்

ஜெகதீப் தன்கர்

கொல்கத்தா

உலக சுகாதார அமைப்புக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு அளிப்பதா என மேற்குவங்க அரசுக்கு அம்மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை நேரில் சென்று மதிப்பீடு செய்வதற்காகவும், ஊரடங்கு உத்தரவு செயல்படுத்தப்படுவது குறித்து பரிசீலிப்பதற்காகவும் மேற்கு வங்க மாநிலத்திற்கு இரண்டு குழுக்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தால் 19-ம் தேதி அன்று அனுப்பப்பட்டன.

தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவன (NDMA) அதிகாரிகள், பொது சுகாதார நிபுணர்கள், நோய் நிலைமைகளை சமாளிப்பதற்கு மாநில அரசு இவர்களின் நிபுணத்துவத்தை பயன்படுத்திக்கொள்ளும் வகையில், இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
கரோனா தொற்றுக்கு எதிரான ஊரடங்கு நடவடிக்கைகள் மேற்கு வங்க மாநிலத்தில செயல்படுத்தப்படுவது குறித்து பல்வேறு இடங்களுக்குச் சென்று அந்தந்த இடங்களில் உள்ள நிலைமைகள் குறித்து அங்கேயே மதிப்பீடு செய்வது, செயல்பாட்டுப் பணிகளை பரிசீலனை செய்வது ஆகியவை குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

கொல்கத்தாவிலும், ஜல்பாய்குரியிலும் உள்ள அமைச்சரக அளவிலான மத்திய குழுவினருக்கு மாநில அரசும், உள்ளாட்சி அதிகாரிகளும், தேவையான ஒத்துழைப்பு தரவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து மேற்குவங்க மாநில தலைமைச் செயலாள் ராஜீவ் சின்காவுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதி இருந்தார்.மேற்கொள்ளும் பணிகளுக்கு மேற்குவங்க அரசு எந்தவித இடையூறும் விளைவிக்கக் கூடாது என்று அறிவுறுத்தி இருந்தார்.

இதற்கு பதிலளித்த மேற்குவங்க மாநில தலைமைச் செயலாள் ராஜீவ் சின்கா, ‘‘மத்திய அரசுடன் எந்த மோதல் போக்கை கடைபிடிக்கவில்லை. முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம்.’’ எனக் கூறியிருந்தார்.

இந்தநிலையில் உலக சுகாதார அமைப்புக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு அளிப்பதா என மேற்குவங்க அரசுக்கு அம்மாநில ஆளுநர்ஜெகதீப் தன்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘‘மம்தா பானர்ஜியின் அதிகாரிகள் மத்திய குழு வந்தபோது அவர்களுக்கு தடை ஏதுமில்லாமல் செயல்பட ஒத்துழைப்பு அளித்து இருக்க வேண்டும். ஆனால் தடை ஏற்படுத்தவே அக்கறை காட்டினர். ஆனால் தற்போது கிழக்கு மிட்னாபூர், பிஷான்பூர் பகுதிக்கு உலக சுகாதார அமைப்பினர் வருகைக்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறார்கள். உலக சுகதார அமைப்பினர் வருகையால் எதை இவர்கள் பெறப்போகிறார்கள். அரசியல் சட்டப்படி செயல்படும் நேரத்தில் இவர்கள் மைக் பிடிப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள்.’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x