Last Updated : 23 Apr, 2020 10:24 AM

 

Published : 23 Apr 2020 10:24 AM
Last Updated : 23 Apr 2020 10:24 AM

மொராதாபாத் வன்முறையில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கும் கரோனா: 73 போலீஸார் தனிமைப் படுத்தப்பட்டனர்

மொராதாபாத் வன்முறையில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கும் கரோனா பாசிட்டிவ் என்று உறுதியானதையடுத்து இவர்களுடன் தொடர்புடைய 73 போலீஸார் தனிமைப் படுத்தப்பட்டனர்

கடந்த வாரம் கரோனா தனிமைப்படுத்தல் தொடர்பாக மொராதாபாத் நவாப்புரத்தில் நடந்த கல்வீச்சுத் தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேருக்கும் கரோனா பாசிட்டிவ் என்று சோதனையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இவர்களுடன் தொடர்பிலிருந்த சுமார் 73 போலீஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 15ம் தேதி நவாப்புரம் பகுதியில் கரோனா தொற்று நோயாளி ஒருவரை தனிமைப்பிரிவு மையத்துக்கு அழைத்துச் செல்ல முயன்ற சுகாதாரப் பணியாள்ர்கள் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது இது தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த 17 பேர்களில் 5 பேருக்கு கரோனா பாசிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து இவர்களுடன் தொடர்பிலிருந்த 73 போலீசார்களும் பல்வேறு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட சாம்பிள்கள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்லன.

இதனால் காவல் நிலையத்தில் போலீஸார் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x