தீவிரமடையும் கரோனா: இந்தியாவில் பாதிப்பு 21 ஆயிரத்தைக் கடந்தது: 680 பேர் உயிரிழப்பு: குஜராத்தில் உயிரிழப்பு 100 பேருக்குமேல் அதிகரிப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவும் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை கரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணி்க்கை 21ஆயிரத்து 393 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணக்கை 681ஆகவும் உயர்ந்துள்ளது

இதுவரை நாடுமுழுவதும் 4,257 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர், 16 ஆயிரத்து 454 பேர் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் நேற்று 37 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த இடத்தில் குஜராத்தில் நேற்று 13 பேர் உயிரிழந்ததையடுத்து அங்கு பலி 103 ஆக அதிகரித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை80 ஆகவும் அதிகரித்துள்ளது.

டெல்லியில் நேற்று ஒருவர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. ராஜஸ்தானில் 27 பேரும், தெலங்கானாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 23 ஆகவும் உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உயிரிழப்பு 21 பேர், தமிழகத்தில் 18 பேர், கர்நாடகாவில் 17 பேர், பஞ்சாப்பில் 16 பேர், மேற்கு வங்கத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 5 பேரும், ஹரியாணா, ஜார்கண்ட், கேரளாவில் தலா 3 பேரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். பிஹாரில் 2 பேரும், ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 5,652 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் மகாராஷ்டிர மாநிலத்தில் 400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 789 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து டெல்லியில் 2,248 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 724 பேர் குணமடைந்துள்ளனர். குஜராத்தில் 2,407 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரராஜஸ்தானில் 1,890 பேரும், தமிழகத்தில் 1,629 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர், 662 பேர் குணமடைந்துள்ளனர். மத்தியப்பிரதேசத்தில் 1,592 பேரும், தெலங்கானாவில் 945பேரும், கேரளாவில் 438 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் 1,449 பேர், ஆந்திரவில் 813 பேரும், கர்நாடகாவில் 427 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 407 பேர், மேற்கு வங்கத்தில் 456 பேர், பஞ்சாப்பில் 251 பேர், ஹரியாணாவில் 262 பேர், பிஹாரில் 143 பேர், அசாமில் 35 பேர், உத்தரகாண்ட்டில் 46 பேர், ஒடிசாவில் 83 பேர், சண்டிகரில் 27 பேர், சத்தீஸ்கரில் 36 பேர், லடாக்கில் 18 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தமான் நிகோபர் தீவில் 18 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 40 பேர், புதுச்சேரியில் 7 பேர் பாதிக்கப்பட்டு 3 பேர் குணமடைந்தனர். கோவாவில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை. மோகாலயாவில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜார்க்கண்டில் 45 பேர், மணிப்பூரில் 2 பேர், மிசோரம், அருணாச்சலப் பிரதேசத்தில் தலா ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்''.

இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in