

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 2-ம் கட்டமாகக் கொண்டு வரப்பட்டுள்ள லாக் டவுனில் மேலும் என்னென்ன கடைகளைத் திறக்கலாம் என்பது குறித்த வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் கட்டமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்தார். முதல்கட்ட லாக் டவுன் காலத்தில் வேளாண் செயல்பாடு, தொழிற்சாலை, வர்த்தக நிறுவனங்கள், சிறுதொழில்கள் மூடப்பட்டதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருமானத்தை இழந்தனர்.
அதன்பின் 2-வது கட்டமாக லாக் டவுன் கடந்த 15-ம் தேதி முதல் வரும் மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே 20-ம் தேதிக்குப் பின் கரோனா பாதிப்பு குறைந்த இடங்களில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, பொருளாதாரச் செயல்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் என்றும் மோடி தெரிவித்தார்.
அதன்படி மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டு வருகிறது. சரக்கு லாரிப் போக்குவரத்து, வேளாண் பணிகள், மீன்பிடித் தொழில், சுயதொழில்கள் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று இரவு வெளியிட்ட அறிவிப்பில் கூடுதலாக என்னென்ன கடைகள் திறக்கலாம் எனப் பட்டியலிட்டுள்ளது.
அதன் விவரம் :
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.