Published : 19 Apr 2020 09:27 AM
Last Updated : 19 Apr 2020 09:27 AM

பிளாஸ்மா சிகிச்சை நடக்கவிருந்த நிலையில் பஞ்சாப் போலீஸ் அதிகாரி கரோனாவுக்கு பரிதாப மரணம்

பஞ்சாப் லூதியானாவைச் சேர்ந்த கரோனா பாசிட்டிவ் போலீஸ் அதிகாரி ஒன்றுக்கும் மேற்பட்ட உடலுறுப்பு சேதத்தினால் மருத்துவமனையில் மரணமடைந்தார்.

52 வயதான அசிஸ்டண்ட் கமிஷனர் அனில் குமார் கோலி, இவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து பிளாஸ்மா சிகிச்சை செய்யப்பட இருந்தது. ஆனால் அதற்கு முன்பாகவே உடல் உள்ளுருப்புகள் செயலிழந்து அவர் பரிதாபமாக இறந்தார்.

பஞ்சாப் அரசினால் முதன் முதலாக பிளாஸ்மா சிகிச்சைக்காக இவருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. சில நாட்களுக்கு முன்புதான் இவரை கரோனா தொற்றியது. இவரது மனைவிக்கும் கரோனா பாசிட்டிவ். அவரது ஓட்டுநர், கான்ஸ்டம்பிள் ஆகியோருக்கும் பாசிட்டிவ்.

பஞ்சாபில் 200க்கும் மேற்பட்ட கரோனா தொற்று உள்ளது. இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். லூதியானாவில் 5 கரோனா கேஸ்கள் உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x