Published : 17 Apr 2020 03:41 PM
Last Updated : 17 Apr 2020 03:41 PM

கரோனா ஊரடங்கு; மக்களுக்கு இடையூறு இருந்தாலும் உயிரை காப்பதே இலக்கு: அமித் ஷா

புதுடெல்லி

கரோனாவுக்கு எதிரான போாட்டத்தில் மக்களுக்கு குறைவான இடையூறு ஏற்பட்டாலும் அவர்களின் உயிரைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரதமர் மோடி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

கரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய சூழலை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது. 2021-22 நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவி்த்தார்.

மேலும் அவர் கூறுகையில் ‘‘ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால் வங்கிகளில் ரொக்கப்பணத்தின் கையிருப்பு அதிகரித்துள்ளது. நபார்டு வங்கி, இந்திய சிறுதொழில்கள் மேம்பாட்டு வங்கி, தேசிய வீ்்ட்டுவசதி வங்கி போன்றவற்றுக்கு பொருளாதார செயல்பாடுகளை ஊக்குவிக்க ரூ.50 ஆயிரம் கோடி சிறப்பு நிதியாகவழங்கப்படும்.

கடனுக்கான வட்டிவீதத்தில் எந்த வீதத்திலும் மாற்றமில்லை, ஆனால் ரிவர்ஸ் ரெப்போ வட்டி வீதம் 4 சதவீதத்திலிருந்து 3.75 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.’’ எனத் தெரிவித்தார்.

இந்தநிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது:
‘‘பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கரோனா தொற்றுக்கு எதிராக இடையறாது தொடர்ந்து போராடி வருகிறது. மக்களுக்கு குறைவான இடையூறு ஏற்பட்டாலும் அவர்களின் உயிரைக் காக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்படுகிறது.

நீடித்த, நிலைத்த இந்தியாவை உருவாக்கும் பாதையில் தொடர்ந்து பயணித்து வருகிறது. ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ள திட்டங்கள் பிரதமர் மோடியின் நோக்கத்தை வலுப்படுத்துவதுடன் இந்திய பொருளாதாரத்தையும் வளர்ச்சியடைய செய்யும்’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x