Published : 17 Apr 2020 01:22 PM
Last Updated : 17 Apr 2020 01:22 PM

தாராவியை மிரட்டும் கரோனா; தொற்று 86 ஆக உயர்வு; பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு

மும்பை

மும்பை தாராவியில் மட்டும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது, கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 23 பேர் பலியாகியுள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

உயிரிழந்தோர் எண்ணிக்கை 437 ஆகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 1,007 ஆக அதிகரித்து 13 ஆயிரத்து 387ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 187 ஆக நேற்று இருந்த நிலையில், இன்று 194 ஆக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியிலும் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தாராவியில் மட்டும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து தாராவியிலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x