

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள 2-வது கட்ட லாக் டவுனில் வரும் 20-ம் தேதிக்குப் பின் வேளாண் துறை, மருத்துவத்துறையில் அனுமதிக்கப்படும் செயல்பாடுகள் குறித்து புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் கட்டமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்தார். முதல் கட்ட லாக் டவுன் காலத்தில் வேளாண் செயல்பாடு, தொழிற்சாலை, வர்த்தக நிறுவனங்கள், சிறுதொழில்கள் மூடப்பட்டதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருமானத்தை இழந்தார்கள்.
ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி கடந்த வாரம் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி நேற்று மக்களிடம் உரையாற்றினார். வரும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும், வரும் 20-ம் தேதிக்குப் பின் கரோனா பாதிப்பு குறைந்த இடங்களில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, பொருளாதாரச் செயல்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் என்றும் மோடி தெரிவித்தார்.
அதன்படி மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டி நெறிமுறைகளை இன்று வெளியிட்டுள்ளது. இதில் வரும் 20-ம் தேதிக்குப் பின் எந்தெந்தத் தொழில்கள் செயல்படலாம் , யாருக்கெல்லாம் விலக்கு போன்றவற்றை அறிவித்துள்ளது.
அதன்படி மே 3-ம் தேதி வரை தடை நீக்கப்படும் வேளாண்துறை மற்றும் மருத்துவத்துறையில் அனுமதிக்கப்படும் செயல்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.
அவை பின்வருமாறு:
(அ) ஆயுஷ் உள்பட அனைத்து விதமான மருத்துவச்சேவைகளும் அனுமதிக்கப்படும்
வேளாண் துறையில் அனுமதிக்கப்படும செயல்பாடுகள்
(அ) அனைத்து வேளாண் மற்றும் தோட்டக்கலை தொடர்பான பணிகளும் செயல்படலாம்
மீன்பிடித் தொழிலில் என்ன நடவடிக்கைகள்
பயிர்த் தொழில்களில் என்னென்ன அனுமதி
கால்நடைத்துறையில் கவனிக்க வேண்டியவை
இவ்வாறு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தப் பணிகளில் ஈடுபடும் அனைவரும் மத்திய அரசு கூறிய வழிகாட்டி நெறிமுறைகள்படியும், பாதுகாப்பு வழிமுறைகளைப்பின்பற்றியும் நடக்க வேண்டும். முகக்கவசம் அணிதல், சமூக விலகலைக் கடைப்பிடித்தல் அவசியம்.
மேலும், இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வரும்போது மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் நடைமுறையில் இருக்கும் தேசியபேரிடர் மேலாண்மைச் சட்டத்தை நீர்த்துப்போகும் வகையில் செயல்படக்கூடாது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது