

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்த லாக்டவுன் 2-வது கட்டமாக மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, இந்த காலக் கட்டத்தில் எந்த துறைகளுக்கு அனுமதி, தடை என்பது குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் கடந்த மாதம் 25-ம் தேதி முதல்கட்டமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்தார். அந்த 21 நாட்கள் நேற்றுடன் முடிந்தது. ஆனாலும் கரோனா வைரஸின் தாக்கம் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதுவரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், 300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளார்கள். முதல்கட்ட லாக்டவுன் காலத்தில் வேளாண் செயல்பாடு, தொழிற்சாலை, வர்த்தக நிறுவனங்கள், சிறுதொழில்கள் மூடப்பட்டதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருமானத்தை இழந்தார்கள்.
ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி கடந்தவாரம் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பெரும்பாலான முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினர்.
இதன் படி நேற்று மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி வரும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்கப்படும் என்றும், வரும்20-ம் தேதிக்குபின் கரோனா பாதிப்பு குறைந்த இடங்களில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, பொருளாதார செயல்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் எனத் தெரிவித்தார். அதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
அதன்படி மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டி நெறிமுறைகளை இன்று வெளியிட்டுள்ளது. இதில் வரும் 20-ம் தேதி்க்கு பின் எந்தெந்த தொழில்கள் செயல்படலாம் , யாருக்கெல்லாம் விலக்கு போன்றவையும், மே 3ம் தேதிவரை எந்தெந்த தொழில்கள், இடங்களுக்கு தடையும் விதித்து அறிவித்துள்ளது.
அதன்படி மே 3-ம் தேதிவரை தடை நீக்கப்படும் தொழில்கள், செயல்பாடுகளை வழங்கப்பட்டுளன. அவை பின்வருமாறு:
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது