Published : 15 Apr 2020 08:24 AM
Last Updated : 15 Apr 2020 08:24 AM

4 மாநிலங்களில் வசிக்கும் வவ்வால்களிடமிருந்து எடுத்த மாதிரியில் கரோனா வைரஸ்: ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்

நாட்டின் 4 மாநிலங்களில் வசிக்கும் வவ்வால்களிடமிருந்து எடுத்த மாதிரியில் 2 மாதிரியில் கரோனா வைரஸை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கரோனா வைரஸ் வவ்வால்கள் மூலம்தான் பரவியது என்று சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அறிந்துள்ளனர். இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலை (ஐசிஎம்ஆர்) சேர்ந்த விஞ்ஞானிகள் இந்தியாவின் 4 மாநிலங்களில் வசிக்கும் வவ்வால்களிடம் சோதனை நடத்தினர்.

வவ்வால்களின் தொண்டையில் இருந்து எடுத்த மாதிரியை சோதனை செய்தபோது அதில் 2-ல் மட்டும் கரோனா வைரஸ் இருந்தது தெரியவந்துள்ளது என ஐசிஎம்ஆர் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கேரளா, இமாச்சலபிரதேசம், புதுச்சேரி, தமிழகம் ஆகிய மாநிலங்களில் வசிக்கும் வவ்வால்களிடமிருந்து மாதிரி எடுக்கப்பட்டது. இதில் 2 மாதிரிகளில் கரோனா வைரஸ் இருந்தது. கர்நாடகா, சண்டிகர், குஜராத், ஒடிசா, பஞ்சாப், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வசிக்கும் வவ்வால்களிடமிருந்து எடுத்த மாதிரியில், கரோனா வைரஸ் தென்படவில்லை என அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x