Last Updated : 06 Aug, 2015 08:47 AM

 

Published : 06 Aug 2015 08:47 AM
Last Updated : 06 Aug 2015 08:47 AM

முன் ஜாமீன் கோரி கோவா முன்னாள் முதல்வர் மனு

நீர் மேலாண்மைத் திட்ட ஒப்பந் தத்தைக் கைப்பற்ற, அமெரிக்க நிறுவனமான லூயி பெர்கர், கடந்த ஆட்சியின்போது கோவா அமைச்சர்களுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில், மாநில முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் முன் ஜாமீன் கோரி மனு செய்துள்ளார்.

இதுதொடர்பாக மாநில காவல் துறையால் ஏற்கெனவே 2 முறை அவர் விசாரிக்கப்பட்டுள்ளார். இந் நிலையில், நேற்று அவர் மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் முன் ஜாமீன் கோரி விண்ணப்பித்துள்ளார்.

இதற்கிடையே, ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் கோவா இயக்குநராக இருந்த ஆனந்த் வாச்சாசுந்தர், நேற்று எந்த காரணமும் தெரிவிக்காமல் தனது ஜாமீன் மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x