Last Updated : 10 Apr, 2020 10:36 AM

 

Published : 10 Apr 2020 10:36 AM
Last Updated : 10 Apr 2020 10:36 AM

மிரட்டும் கரோனா: 200 பேரை நெருங்கும் உயிரிழப்பு; 6 ஆயிரத்தைக் கடந்தது பாதிப்பு: மகாராஷ்டிராவில் 25 பேர் பலி; 500 பேருக்கு மேல் குணமடைந்தனர்

இந்தியாவை உலுக்கி எடுத்து வரும் கரோனா வைரஸால் உயிரிழப்பும், பாதிப்பும் அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை மாலையிலிருந்து இன்று காலை வரை நாடுமுழுவதும் 30 பேர் கரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.

இதனால் கரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 199 ஆகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 412 ஆகவும் அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 5,709 பேரும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 503 ஆக உயர்ந்துள்ளது.

வியாழக்கிழமை மாலையிலிருந்து கரோனா வைராஸால் 30 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 25 பேர், டெல்லியில் 3 பேர், குஜராத், ஜார்கண்டில் தலா ஒருவர்.

இன்று காலை 9மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை கரோனா வைரஸுக்கு அதிகமான உயிரிழப்பு நேர்ந்துள்ளது. அங்கு 97 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்கள்.

அடுத்த இடத்தில் குஜராத்தில் 17 பேரும், மத்தியப் பிரதேசத்தில் தலா 16 பேரும், டெல்லியில் 12 பேரும், பஞ்சாப், தமிழகத்தில் தலா 8 பேரும், தெலங்கானாவில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு வங்கத்தி்ல 5 பேரும், ஆந்திராவில், உத்தரப் பிரதேசம், ஜம்மு காஷ்மீரில் தலா 4 பேரும், ராஜஸ்தான், ஹரியாணாவில் தலா 3 பேரும், கேரளாவில் 2 பேரும் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
பிஹார், ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 1,364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 125 பேர் குணமடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் 834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 21 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லியில் 720 பேர் பாதிக்கப்படடுள்ளனர். 25 பேர் குணமடைந்துள்ளனர். தெலங்கானாவில் 442 பேரும், கேரளாவில் 357 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் 410 பேரும், ராஜஸ்தானில் 463 பேரும், ஆந்திராவில் 348 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 259 பேரும், கர்நாடகாவில் 181 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் 241 பேரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 158, மேற்கு வங்கத்தில் 116, பஞ்சாபில் 101, ஹரியாணாவில் 169, பிஹாரில் 39, அசாமில் 29, உத்தரகாண்ட்டில் 35, ஒடிசாவில் 44, சண்டிகரில் 18, சத்தீஸ்கரில் 10, லடாக்கில் 15 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தமான் நிகோபர் தீவில் 11 பேர், கோவாவில் 7 பேர், இமாச்சலப்பிரதேசத்தில் 18 பேர், புதுச்சேரியில் 5 பேர், ஜார்க்கண்ட்டில் 13 பேர், மணிப்பூரில் 2 பேரும், மிசோரம், அருணாச்சலப்பிரதேசத்தில் தலா ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்''

இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x