Published : 09 Apr 2020 05:57 PM
Last Updated : 09 Apr 2020 05:57 PM

முககவசம் இல்லாமல் வெளியே வந்தால் குற்றம்; ரூ. 200 அபராதம்: ஒடிசா அரசு எச்சரிக்கை

ஒடிசா மாநிலத்தில் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய தேவைக்கு வெளியே வரும்போதும் கூட முககவசம் இல்லாமல் வெளியே வருபவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில அரசு எச்சரித்துள்ளது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30ம்- தேதி நீட்டிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து ஒடிசா மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்,
ஏப்ரல் 30-ம் தேதி வரை ரயில்களை இயக்க வேண்டாம், விமான போக்குவரத்தையும் ஏப்ரல் 30-ம் தேதி வரை தொடங்க வேண்டாம்,
அதுபோலவே கல்வி நிறுவனங்களை ஜூன் மாதம் 17-ம் தேதிக்கு முன்னதாக திறக்க வேண்டாம் என மத்திய அரசை ஒடிசா அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைக்கு வெளியே வரும்போதும் கூட முககவசம் இல்லாமல் வெளியே வருபவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில அரசு எச்சரித்துள்ளது. முதல் மூன்று முறை பிடிபட்டால் 200 ரூபாய் அபராதம் எனவும், அதற்கு மேல் தொடர்ந்தால் அபராத தொகை 500 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் ஒடிசா அரசு எச்சரித்துள்ளது.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x