Published : 09 Apr 2020 04:39 PM
Last Updated : 09 Apr 2020 04:39 PM

கரோனா தொற்று இல்லாத பேருந்து: கேரளாவில் முதன்முறையாக தொடக்கம்

கேரளாவில் கரோனா தொற்று இல்லாமல் பாதுகாப்புடன் கூடிய பேருந்து திருவனந்தபுரத்தில் முதன்முறையாக இயக்கப்பட்டது. காவல்துறையினர், மருத்துவர்கள் பயணம் செய்ய இந்த பேருந்து பயன்படுத்தப்படவுள்து.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கேரளாவில் கரோனா தொற்று இல்லாமல் பாதுகாப்புடன் கூடிய பேருந்து திருவனந்தபுரத்தில் முதன்முறையாக இயக்கப்பட்டது. இந்த பேருந்தை கேரள காவல்துறை டிஜிபி லோக்நாத் பெஹரா தொடங்கி வைத்தார்.

இந்த பேருந்து காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கரோனா நோயாளிகளுக்கு துணையாக இருப்பவர்கள் பயணம் செய்ய ஏதுவாக இருக்கும் என பெஹரா கூறினார். தொடர்ந்து கேரளாவின் மற்ற பகுதிகளிலும் இதேபோன்ற பேருந்து இயக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x