Last Updated : 09 Apr, 2020 10:13 AM

 

Published : 09 Apr 2020 10:13 AM
Last Updated : 09 Apr 2020 10:13 AM

அச்சுறுத்தும் கரோனா: 24 மணிநேரத்தில் இந்தியாவில் 540 பேர் பாதிப்பு; மேலும் 17 பேர் உயிரிழப்பு : மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லியில் பாதிப்பு அதிகம்

கோப்புப்படம்

புதுடெல்லி

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருவதை உணர்த்தும் விதமாக கடந்த 24 மணிநேரத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 17 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் கரோனா வைரஸால் பாதி்க்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்து 734 ஆகவும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 166 ஆகவும் அதிகரித்துள்ளது. அதேசமயம் ஆறுதல் தரும் வகையில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 473 ஆக உயர்ந்துள்ளது.

8 உயிரிழப்புகள் மகாராஷ்டிராவிலும், குஜராத்தில் 3 பேரும், ஜம்மு காஷ்மீரில் இருவரும், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, தமிழகத்தில் தலா ஒருவரும் கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்துள்ளார்கள்.

இன்று காலை 9மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை கரோனா வைரஸுக்கு அதிகமான உயிரிழப்பு நேர்ந்துள்ளது. அங்கு 72 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்கள்.

அடுத்த இடத்தில் குஜராத்தில் 16 பேரும், மத்தியப் பிரதேசத்தில் தலா 13 பேரும், டெல்லியில் 9 பேரும், பஞ்சாப், தமிழகத்தில் தலா 8 பேரும், தெலங்கானாவில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு வங்கத்தி்ல 5 பேரும், ஆந்திராவில், உத்தரப் பிரதேசம், ஜம்மு காஷ்மீரில் தலா 4 பேரும், ராஜஸ்தான், ஹரியாணாவில் தலா 3 பேரும், கேரளாவில் 2 பேரும் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
பிஹார், ஒடிசா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 1,135 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 117 பேர் குணமடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் 738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 21 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லியில் 669 பேர் பாதிக்கப்படடுள்ளனர். 21 பேர் குணமடைந்துள்ளனர். தெலங்கானாவில் 427 பேரும், கேரளவில் 345 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் 361 பேரும், ராஜஸ்தானில் 381 பேரும், ஆந்திராவில் 348 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 229 பேரும், கர்நாடகாவில் 181 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் 179 பேரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 158, மேற்கு வங்கத்தில் 103, பஞ்சாபில் 101, ஹரியாணாவில் 147, பிஹாரில் 38, அசாமில் 28, உத்தரகாண்ட்டில் 33, ஒடிசாவில் 42, சண்டிகரில் 18, சத்தீஸ்கரில் 10, லடாக்கில் 14 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தமான் நிகோபர் தீவில் 11 பேர், கோவாவில் 7 பேர், இமாச்சலப்பிரதேசத்தில் 18 பேர், புதுச்சேரியில் 5 பேர், ஜார்க்கண்ட்டில் 4 பேர், மணிப்பூரில் , மிசோரம், அருணாச்சலப்பிரதேசத்தில் தலா ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்''.

இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x