Published : 03 Aug 2015 11:26 AM
Last Updated : 03 Aug 2015 11:26 AM
நெஸ்ட்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் வகைகளில் காரீயம் வேதிப் பொருள் அதிக அளவில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டதால் அந்த நிறுவன நூடூல்ஸ்களுக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டது.
பிஹார் மாநிலத்தில் கடந்த 5-ம் தேதி முதல் மேகி நூடூல்ஸ் வகைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இதர நூடூல்ஸ் வகைகளின் தரம் குறித்து மாநில உணவுத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
இதில் 11 வகையான நூடூல்ஸ்களில் ரசாயன பொருட்கள் அளவுக்கு அதிகமாக கலந்திருப்பது கண்டறியப்பட்டது. அந்த 11 நூடுல்ஸ்களுக்கும் பிஹார் அரசு நேற்று தடை விதித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT