Last Updated : 05 Apr, 2020 11:51 AM

 

Published : 05 Apr 2020 11:51 AM
Last Updated : 05 Apr 2020 11:51 AM

ஜெய்பூர்: கரோனா நோயாளி மரணம்

ஜெய்பூர்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் கரோனா பாசிட்டிவ் நோயாளி ஒருவர் சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார். இவருக்கு வயது 82.

இவர் எஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் ஞாயிறன்று பலியானதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ராஜஸ்தானில் மேலும் 5 பேருக்கு கரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளது.

பலி எண்ணிக்கை மாநிலத்தில் 5 ஆக அதிகரித்துள்ளது.

இவர் என்ன காரணத்தினால் இறந்தார் என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ராஜஸ்தானில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 210 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,378 ஆக அதிகரித்துள்ளது. ஒரு சில தகவல்கள் 3,500 என்று தெரிவிக்கிறது. உலகம் முழுதும் 11 லட்சம் பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் பலி எண்ணிக்கை 104 ஆனது.

பாகிஸ்தானில் 2,800 பேர் வரை தொற்று ஏற்பட்டுள்ளது சுமார் 40 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x