Published : 03 Apr 2020 04:29 PM
Last Updated : 03 Apr 2020 04:29 PM

கரோனா நோயாளிகள் மருத்துவர்களை தாக்கியதாக புகார்: ஹைதராபாத் மருத்துவமனையில் போலீஸ் குவிப்பு

ஹைதராபாத்

தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் சிலர் மருத்துவமனையில் மருத்துவர்களை தாக்கியதாக தகவல் வெளியான நிலையில் அங்கு பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் 21நாட்கள் ஊரடங்கு நாடுமுழுவதும் கடந்த 25-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இன்று ஊரடங்கு உத்தரவில் 9-வது நாளை மக்கள் எட்டியுள்ளார்கள். கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மக்களில் பெரும்பான்மையினர் ஊரடங்கு உத்தரவுக்கு கட்டுப்பட்டு வீட்டில் இருக்கின்றனர்.

இந்தநிலையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இந்தியாவில் 2,301 ஆக அதிகரித்துள்ளது. 157 பேர் குணமடைந்தனர். அதேசமயம் கரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த 2,301 கரோனா வைரஸ் நோயாளிகளில் 55 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலங்கானாவில் 107 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் பலர் ஹைதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவர்களில் சிலர் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட சிலரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மருத்துவமனை சார்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x