Published : 02 Apr 2020 10:29 PM
Last Updated : 02 Apr 2020 10:29 PM

16 ஹஜ் இல்லங்கள் கரோனா தடுப்பு மையங்களாக மாற்றம்: நக்வி தகவல்

நாடுமுழுவதும் 16 ஹஜ் இல்லங்கள் கரோனா தொற்று ஏற்பட்டவர்களை தடுத்து வைக்கும் பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அச்சம் காரணமாக கடைகளுக்கு மருந்து உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக வந்த மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வருகின்றனர். கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டு ஸ்தலங்களும் மூடப்பட்டுள்ளன.

தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் முக்கிய நகரங்களில் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாளுக்குநாள் இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், பாதிப்படைந்தவர்களை தடுத்து வைக்கவும் ஏராளமான பகுதிகள் தேவைப்படுகிறது.

இந்த நிலையில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில் ‘‘நாடுமுழுவதும் 16 ஹஜ் இல்லங்கள் கரோனா தொற்று ஏற்பட்டவர்களை தடுத்து வைக்கும் பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளது.’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x