Published : 24 Aug 2015 08:30 AM
Last Updated : 24 Aug 2015 08:30 AM
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் எகிப்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு 4 நாள் அரசு முறை பயணமாக நேற்று புறப்பட்டுச் சென்றார்.
முதலில் எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு செல்லும் சுஷ்மா, அந்நாட்டு அதிபர் அப்துல் பட்டா அல் சிசியை சந்திக்கிறார். பின்னர் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் சமே ஹசன் ஷூக்ரியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின் னர் ஜெர்மனியின் பெர்லின் நகருக்கு செல்லும் சுஷ்மா, அந்நாட்டு வெளி யுறவுத் துறை அமைச்சர் பிராங்க் வால்டர் ஸ்டீன்மீர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளார். இருதரப்பு வர்த்தக உறவை மேம்படுத்துவது, முத லீட்டை ஈர்ப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களுடனும் சுஷ்மா பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT