Last Updated : 30 Mar, 2020 03:30 PM

 

Published : 30 Mar 2020 03:30 PM
Last Updated : 30 Mar 2020 03:30 PM

பகுதியைக் குறிப்பிட்டு 15 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டதாக  ‘போலி தகவல்’- கொல்கத்தாவில் பெண் கைது

வாட்ஸ் அப் செயலியில் கரோனா வைரஸ் பரவல் குறித்த போலி தகவலைப் பரப்பியதற்காக பெண் ஒருவரைக் கைது செய்ததாக கொல்கத்தா நியு அலிபூர் பகுதி உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர் தன் வாட்ஸ் அப் பதிவில் நியு அலிபூர் பகுதியில் 15 பேருக்கு கரோனா வைரஸ் பரவியுள்ளது என்றும் இதனை மாநில அரசு மறுக்கிறது என்றும் பதிவிட்டிருந்ததாக அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

30 வயதுக்கும் சற்று கூடுதலான இந்தப் பெண்மணி ஞாயிறன்று கைது செய்யப்பட்டார், அதே பகுதியிலிருந்து சிலர் இந்தப் பெண் குறித்து நியு அலிப்பூர் போலீசாரிடம் புகார் பதிவு செய்ய அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் தனது பதிவுக்கு ஆதாரமாக எதையும் காட்ட முடியவில்லை. இதனையடுத்து இவரைக் கைது செய்ததோடு வாட்ஸ் அப் குழுமத்திடம் இவரது தகவலை நீக்கிவிடவும் கோரப்பட்டதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x