Last Updated : 14 Aug, 2015 06:17 AM

 

Published : 14 Aug 2015 06:17 AM
Last Updated : 14 Aug 2015 06:17 AM

பாக். 5-வது நாளாக எல்லையில் அத்துமீறல்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய பாகிஸ்தான் எல்லையில், நேற்று பாகிஸ்தான் ஐந்தாவது நாளாக போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி, இந்திய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

ஜம்மு, ரஜவ்ரி மற்றும் பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் உள்ள இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மேற்கண்ட மூன்று மாவட்டங்களில் உள்ள கே.ஜி.பிரிவு, பி.ஜி.பிரிவு மற்றும் பல்லன்வாலா ஆகிய பகுதிகளில் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பாகிஸ்தான் தரப்பில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து தானியங்கி ஆயுதங்கள், வெடிகுண்டுகள் மற்றும் ராக்கெட்டுகள் போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன.

பாகிஸ்தானின் இந்தத் தாக்கு தலுக்கு இந்திய தரப்பில் இருந்தும் பதிலடி கொடுக்கப்பட்டு வருவ தாகவும், எனினும், இரு தரப்பிலும் உயிர்ச்சேதங்களோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x