Published : 29 Mar 2020 09:10 PM
Last Updated : 29 Mar 2020 09:10 PM
ஈரானில் கரேனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2640 ஆக உயர்ந்துள்ளது. இதனால் நாடுதழுவிய ஊரடங்கு தொடரும் என அந்நாட்டின் அதிபர் ஹாசன் ரூஹானி அறிவித்துள்ளார்.
சீனாவின் வூஹான் நகரில் உருவான கோவிட் -19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு இதுவரை உலக அளவில் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு நாடுகளிலும் கரோனா தொற்று பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஈரானும் ஒன்று.
ஈரானில் கோவிட் காய்ச்சலால் இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன.
தொடர்ந்து கோவிட் காய்ச்சல் பரவலைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் ஈரானுக்கு உதவ அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் முன்வந்த நிலையில் ஈரான் அந்த உதவிகளை மறுத்துவிட்டது.
இதனைத் தொடர்ந்து ஈரானில் கோவிட்-19 காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 2640 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஈரான் அதிபர் அதிபர் ஹாசன் ரூஹானி கூறுகையில் ‘‘நாடுமுழுவதும் கரேனா தொற்றால் பாதிக்கபட்டோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நாடுதழுவிய ஊரடங்கு தொடரும்.’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT