Published : 28 Mar 2020 08:47 PM
Last Updated : 28 Mar 2020 08:47 PM

கரோனா முன்னெச்சரிக்கை; காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கண்காணிப்பு குழு: சோனியா காந்தி அறிவிப்பு 

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக கண்காணிப்பு குழுவை அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் வெளிமாநிலங்களில் இருந்து வந்து பணியாற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

இந்தநிலையில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக கண்காணிப்பு குழுவை அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார்.

இக்குழுவில் மூத்த காங்கிரஸ் தலைவர்களான ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், தர்மத்வாஜ் சாகு, வீரப்ப மொய்லி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அரசுகளுடன் இணைந்து பணிகளை செய்யவும், ஒருகிணைப்பை மேற்கொள்ளவும் இந்த குழு பணியாற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x