Published : 28 Mar 2020 05:58 PM
Last Updated : 28 Mar 2020 05:58 PM

டெல்லியை விட்டு வெளியேறாதீர்கள்; ஏற்பாடுகளை செய்கிறோம்: புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கேஜ்ரிவால் வலியுறுத்தல்

டெல்லியை விட்டு வெளியேற வேண்டாம், தேவையான ஏற்பாடுகளை செய்கிறோம், இங்கேயே தங்கி இருங்கள் என டெல்லியில் இருந்து சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் தொழிலாளர்களை முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் வெளிமாநிலங்களில் இருந்து வந்து பணியாற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

பல மாநிலங்களில் அவர்கள் உள்ளூர் போக்குவரத்தை பயன்படுத்திக் கொள்வதுடன் சிலர் நடந்த செல்கின்றனர்.

இந்தநிலையில் கேஜ்ரிவால் இதுபற்றி கூறியதாவது:

பிற மாநிலங்களில் இருந்து டெல்லியில் வந்து பணியாற்றும் தொழிலாளர்கள் கரோனா பீதி மற்றும் ஊரடங்கு காரணமாக டெல்லியை விட்டு வெளியேற வேண்டாம்.இதுதொடர்பாக ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். தேவையான ஏற்பாடுகளை செய்கிறோம்.

500 பள்ளிகள் தங்குள் இடங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. தினந்தோறும் 4 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்து வருகிறோம். இங்கேயே தங்கி இருங்கள். கரோனா பரவாமல் இருக்க வேண்டும் என்றால் மக்கள் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.
இவ்வாறு கேஜ்ரிவால் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x