Published : 28 Mar 2020 04:34 PM
Last Updated : 28 Mar 2020 04:34 PM

கரோனா; தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து தலா ரூ.1 கோடி: பாஜக எம்.பி.க்களுக்கு நட்டா உத்தரவு

பாஜக எம்.பி,க்கள் அனைவரும் தங்கள் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து கரோனா தடுப்புக்காக மத்திய அரசு உருவாக்கியுள்ள நிதிக்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என அக்கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவிடடுள்ளார்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் வெளிமாநிலங்களில் இருந்து வந்து பணியாற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

கரோனா பரவுவது தீவிரமடைந்துள்ள நிலையில் அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. கரோனா வைரஸ் தொற்று காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு நிதித் திட்டத்தை அறிவித்துள்ளார்.

கரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக பெரும் நிதி தேவைப்படுகிறது. இதற்காக நிதி திரட்டும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதற்காக வங்கி கணக்கு ஒன்றை ஏற்படுத்தி நிதியும் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர்.

இந்தநிலையில் பாஜக எம்.பி,க்கள் அனைவரும் தங்கள் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து கரோனா தடுப்புக்காக மத்திய அரசு உருவாக்கியுள்ள நிதிக்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என அக்கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவிடடுள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x