Published : 27 Mar 2020 09:04 PM
Last Updated : 27 Mar 2020 09:04 PM

கேரளாவில் மேலும் 39 பேருக்கு கரோனா பாதிப்பு

கேரளாவில் ஒரே நாளில் புதிதாக 39 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடரந்து உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் அறிவிப்பு படி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் பல்வேறு மாநிலங்களில் மருத்துவர்கள் உட்பட சுகாதாரத்துறை பணியாளர்கள் அனைவரும் இரவும் பகலும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதாலும், கரோனா தொற்று குறித்த சோதனையாலும் கூடுதலாக மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

கேரளாவில் ஒரே நாளில் புதிதாக 39 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:
காசர்கோடு பகுதியில் 34 பேருக்கும், கண்ணூரில் 2 பேருக்கும், திரிச்சூர், கொல்லம், கோழிக்கோட்டில் தலா ஒருவருக்கு கொரோனா உறுதியாகியது.

இவர்கள் அனைவரையும் சேர்த்து அங்கு மொத்த தொற்று எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது. இதில் 12 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து உள்ளனர்.

தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவருக்கும் மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அம்மாநில முதல்
முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x