Published : 25 Mar 2020 04:39 PM
Last Updated : 25 Mar 2020 04:39 PM

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை; சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

புதுடெல்லி

கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடபெற்றது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடரந்து உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் அறிவிப்பு படி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துது தொடர்பாகவும், பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு தேவையான சிகிச்சை வழங்குவது பற்றியும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடபெற்றது.

இந்தக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பு செய்யப்பட வேண்டிய மற்ற துறைகளின் சார்பில் அமைச்சர்களும் பங்கேற்றனர். மாநில அரசுகள் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை, தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. இதுமட்டுமின்றி சுகாதாரத்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கையை தீவிரப்படுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x