Published : 25 Mar 2020 04:01 PM
Last Updated : 25 Mar 2020 04:01 PM

கரோனா முன்னெச்சரிக்கை; கடைகளில் பொருட்களை வாங்க வந்த மக்கள்; சமூக இடைவெளி கடைபிடிப்பு

லக்னோ

நாட்டின் பல பகுதிகளிலும் கரோனா தொற்று அச்சம் காரணமாக கடைகளுக்கு மருந்து உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக வந்த மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தனர்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடரந்து உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் அறிவிப்பு படி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் இருப்பதுடன் மக்கள் வெளியில் வந்தால் சமூக இடைவெளியை சரியான முறையில் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுனார்

நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகளில் மக்கள் வெளியில் வரும்போது இந்த சுய ஒழுங்கை கடைபிடிக்கத் தொடங்கியுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் கரோனா தொற்று அச்சம் காரணமாக கடைகளுக்கு மருந்து உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக வந்த மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தனர்.

இதற்கு ஏற்றவகையில் கடைகளுக்கு முன்பு உரிய வகையி்ல் மக்கள் இடைவெளி விட்டு நிற்கும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டு இருந்தன. அந்த வட்டங்களில் வரிசைப்படி நின்று மக்கள் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

இதுபோலவே டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் பலசரக்கு மற்றும் காய்கறிகள் வாங்குபவர்களும் சமூக இடைவெளியை கடைபிடித்து வாங்கிச் சென்றனர். தெருவோரங்களில் கடை நடத்துபவர்களிடம் பொருட்கள் வாங்கவும் இதே நடைமுறையை போலீஸார் ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி மக்கள் வட்டத்திற்குள் வரிசையாக நின்று பொருட்களை வாங்கிச் சென்றனர்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x