Last Updated : 25 Mar, 2020 10:35 AM

 

Published : 25 Mar 2020 10:35 AM
Last Updated : 25 Mar 2020 10:35 AM

கரோனா பாதிப்பு ஈரானிலிருந்து அழைத்து வரப்பட்ட 277 இந்தியர்கள்: ஜோத்பூர் ராணுவ மையத்தை அடைந்தனர்

ஈரானிலிருந்து அழைத்து வரப்பட்ட யாத்திரிகர்கள் ஜோத்பூர் ராணுவச் சுகாதார மையத்தில்..

கரோனா வைரஸ் பாதிப்படைந்த ஈரானிலிருந்து வந்த அடுத்த பேட்ச் ஆன 277 பேர் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் ராணுவ மையத்துக்கு வந்து சேர்ந்தனர்.

இது தொடர்பாக இவர்களுக்கு முதற்கட்ட பரிசோதனை நடத்தப்பட்டிருப்பதாகவும் , பிறகு ஜோத்பூர் ராணுவ நிலையத்தில் உள்ள ராணுவ சுகாதார மையத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ராணுவம், ராஜஸ்தான் மாநில மருத்துவ அதிகாரிகள் மற்றும் சிவில் நிர்வாக அதிகாரிகள் ஆகியோருடன் ஒருங்கிணைந்து ஈரானிலிருந்து வருபவர்களுக்கு மருத்துவ உதவியை உறுதி செய்து வருகின்றனர்.

277 பேர்களில் 273 பேர் புனித யாத்திரிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் 149 பேர் பெண்கள். இங்கு ராணுவ மருத்துவர்கள் 24 மணி நேரமும் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x