Last Updated : 25 Mar, 2020 10:15 AM

 

Published : 25 Mar 2020 10:15 AM
Last Updated : 25 Mar 2020 10:15 AM

இந்தூரில் 5 பேருக்கு கரோனா ‘பாசிட்டிவ்’ உறுதி: மத்தியப் பிரதேச பாதிப்பு எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் மேலும் 5 பேர் கரோனா தொற்று சோதனையில் பாசிட்டிவ் என்று தெரிந்ததனால் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் மத்தியப் பிரதேசத்தில் கோவிட் -19 நோய்த்தொற்று 14 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் ஒருவர் கூட அயல்நாடு சென்று திரும்பியவர்கள் அல்லர். இந்த 14 பேரில் பெண் ஒருவரும் அடங்குவார். முன்னதாக ஜபல்பூரில் 6 கரோனா தொற்று பாசிட்டிவ் ஆகியுள்ளது.

இந்நிலையில் மத்தியப் பிரதேச முக்கிய நகரங்கள் லாக் டவுனில் உள்ளன. இதற்கிடையே இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 562 ஆக அதிகரித்துள்ளது. இதில் 43 பேர் அயல்நாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x