கரோனா தடுப்பு நடவடிக்கை: காட்சி ஊடகத்தினருடன் பிரதமர் மோடி ஆலோசனை

கரோனா தடுப்பு நடவடிக்கை: காட்சி ஊடகத்தினருடன் பிரதமர் மோடி ஆலோசனை
Updated on
1 min read

நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ஊடகங்களின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலிக் காட்சியில் உரையாடினார். கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கை தொடர்பாக அவர் விவாதித்தார்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கரோனா வைரஸ் பரவலில் இந்தியா தற்போதும் 2-ம் கட்டத்தில் இருப்பதால், அதற்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்த மத்திய அரசு, திரையரங்குகள், மக்கள் கூடுமிடங்கள், ஷாப்பிங் மால்கள் போன்றவற்றை வரும் 31-ம் தேதிவரை திறக்கத் தடை விதித்தது. ரயில்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் வேண்டுகோள்படி மக்கள் தாமாக முன்வந்து நேற்று சுய ஊரடங்கை நடைமுறைப்படுத்தினர். இதன் தொடர்ச்சியாக நாடுமுழுவதும் 80-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கரோனா தொற்று அதிகம் பரவும் பகுதியாக கண்டறியப்பட்டு மற்ற பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்து நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கை தொடர்பாக மாநில முதல்வர்கள், அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ துறையினர் என பல தரப்பினருடன் பிரதமர் மோடி காணொலிக் கட்சியில் உரையாடி வருகிறார்.

இன்று அவர் காட்சி ஊடக பிரதிநிதிகளுடன் காணொலிக் காட்சியில் உரையாற்றினார். அப்போது கரோனா தடுப்பு நடவடிக்கைகள், குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய பணிகள் குறித்தும் ஊடக பிரதிநிதிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in