Published : 22 Mar 2020 04:06 PM
Last Updated : 22 Mar 2020 04:06 PM

மக்கள் ஊரடங்கு; முடங்கியது டெல்லி; வெறிச்சோடிய சாலைகள்; படங்கள்

புதுடெல்லி

டெல்லியில் மக்கள் ஊரடங்கு முழு அளவில் நடைபெறுகிறது.

சீனாவில் உருவாகி உலகை ஆட்டிப் படைத்து வரும் கரோனா வைரஸுக்கு உலக நாடுகள் அஞ்சி வருகின்றன. உலக அளவில் இதுவரை கரோனா வைரஸுக்கு 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளார்கள். 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும். தடுப்பு நடவடிக்கைகளும் எடுத்தாலும் கரோனா பரவலைத் தடுக்க முடியவில்லை. தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

மேலும் இன்று மக்கள் தாமாக முன்வந்து சுய ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டபடி மக்கள் ஊரடங்கு நடந்து வருகிறது.

பல்வேறு மாநிலங்களிலும் மக்கள் ஊரடங்கு முழு அளவில் நடைபெறுகிறது. தலைநகர் டெல்லயில் தெருக்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

பரபரப்பாக வர்த்தகம் நடைபெறும் மார்க்கெட், சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி காணப்படுகிறது.

மெட்ரோ ரயில் இயக்கப்படாததால் மெட்ரோ ரயில் நிலையங்கள் கலையிழந்து காணப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x