Last Updated : 22 Mar, 2020 02:14 PM

 

Published : 22 Mar 2020 02:14 PM
Last Updated : 22 Mar 2020 02:14 PM

கரோனா வைரஸ்: ஒரேநாளில் 11 பேருக்குத் தொற்று- மார்ச் 31 வரை பஞ்சாபில் முழு அடைப்புக்கு உத்தரவு

மார்ச் 22 நிலவரப்படி கரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இந்தியாவில் 350ஐ நெருங்கியுள்ளது, இதில் 320 பேருக்கு வைரஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 5 பேர் இறந்துள்ளனர்.

பஞ்சாபில் கோவிட்19 வைரஸ் தொற்று இதுவரை 14 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் வைரஸ் பரவுவதைத் தடுக்க முழு அடைப்புக்கு பஞ்சாப் அரசு உத்தரவிட்டது. முதல்வர் இதனை தன் ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

“அத்தியாவசிய அரசு சேவைகள், பால், மளிகை சாமான்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள் தவிர பிற அவசர அவசியமில்லாத சேவைகள் மார்ச் 31 வரை நிறுத்தப்படுகிறது. அனைத்து போலீஸ் அதிகாரிகளும் இந்த உத்தரவை அமல் செய்யுமாறு உத்தரவிடப்படுகிறார்கள்.

நேற்று, மார்ச் 21ம் தேதி புதிதாக 11 புதிய கரோனா நோயாளிகள் ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கு பீதி ஏற்பட்டுள்ளது.

இன்று ஜனதா ஊரடங்கு ஆகையால் பஞ்சாப், சண்டிகர், ஹரியாணா விரிச்சோடி காணப்படுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x