Last Updated : 19 Mar, 2020 08:44 AM

 

Published : 19 Mar 2020 08:44 AM
Last Updated : 19 Mar 2020 08:44 AM

கரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த பயிற்சி டாக்டருக்கு தொற்று

லக்னோ:

கரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த பயிற்சி டாக்டருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் (கேஜிஎம்யு) பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார் 25 வயதான இளைஞர். இந்நிலையில் கேஜிஎம்யு மருத்துவமனையில் உள்ள கரோனா வைரஸ் நோயாளிகளுக்கான தனி வார்டில் நோயாளிகளுக்கு சிகிச்சையை அளித்து வந்தார் பயிற்சி மருத்துவர்.

இந்நிலையில் பயிற்சி மருத்துவருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை தனி வார்டில் டாக்டர்கள் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து கேஜிஎம்யு பல்கலை.யில் வகுப்புகள் அனைத்தும் ஏப்ரல் 2 வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

கனடாவிலிருந்த வந்த பெண்ணுக்கு சிகிச்சையளித்தபோது அந்த பயிற்சி மருத்துவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x